palamunaiworld.: மடிக்கணனியை சரியான முறையில் பராமரிக்க.


மடிக்கணனியை சரியான முறையில் பராமரிக்க.

உணவு, உடை, தங்குமிடம் என்று அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் தற்போது கணனியும் இணைந்து விட்டது.
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கணனியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
அதற்கான டிப்ஸ்

1. மடிக்கணனியின் திரை மிக முக்கியம். திரையை துடைக்கும் போது சரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும். திரை மிக அழுத்தினால் சேதமடையவும் வாய்ப்புகள் உண்டு.
2. பயணம் செய்யும் போது மடிக்கணனியை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தூசி மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விலக்கியே வைப்பது நல்லது.
3. முக்கியமாக அசல் உரிமத்துடன் கூடிய ஆண்டி-வைரஸ் மென்பொருட்களை நிறுவியிருப்பது நல்லது.
4. மடிக்கணினியை தூக்கிச் செல்ல முதுகில் மாட்டும் பேக்கை பயன்படுத்துங்கள்.
5. உணவு உண்ணுவதற்கு செல்லும் போதோ அல்லது தொலைபேசியில் பேசுவதற்கு செல்லும் போதோ மடிக்கணினியை ஹைபர்னேட் நிலையிலோ வைத்திருங்கள். இது மின்சார பயன்பாட்டை குறைத்து, மடிக்கணனிக்கு அதிக ஆயுளை தரும்.
6. தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேல் மடிக்கணனியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
7. தொடர்ச்சியாக இயக்கத்தில் இருந்தால், மடிக்கணனி அதிக சூடாகும். சில மணி நேரத்தில் அணைக்கவில்லை என்றால், அதன் செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடும்.
8. கணனி வாங்கும் போதே ஃபயர்வால் நிறுவப்பட்டிருக்கும். அது இல்லையென்றால் உங்கள் கணனியை பாதுகாக்க ஃபயர்வலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது புதிதாக வாங்கியோ நிறுவுங்கள்.
9. மடிக்கணினியை வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதிக்க வேண்டும்.
10. எப்போதும் மடிக்கணனியை ஒரு தட்டையான பரப்பில் வைத்திருந்தால் அது மடிக்கணனியை சேதப்படுத்தாமல் பாதுகாக்கும்.
11. மடிக்கணனிக்கான குளிர்ச்சியை ஏற்படுத்தும் விசிறி சந்தையில் கிடைக்கிறது. அதில் ஒன்றை வாங்கி பயன்படுத்துங்கள். இது மடிக்கணனி அதிக சூடாக்குவதை தடுக்கும்.