palamunaiworld.: சித்திர வேலைப்பாடு​களுக்கு உதவும் நவீன பிரிண்டர்


சித்திர வேலைப்பாடு​களுக்கு உதவும் நவீன பிரிண்டர்

கல்வி கற்கும் குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய வகையில் சித்திர வேலைப்பாடுகளை வாட்டர் கலர் மூலம் பிரிண்ட் செய்யக்கூடிய புதிய பிரிண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
மரப்பலகையினால் ஆன பிரேம்களால் உருவாக்கப்பட்டுள்ள WaterColorBot எனும் இப் பிரிண்டர் மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தினைக் கொண்ட போதிலும் கணனிகளின் உதவியுடன் வரையப்படும் ஓவியங்களை துல்லியமான முறையில் பிரிண்ட் செய்து தரவல்லது.
Evil Mad Scientist Laboratories எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள தூரிகை தானாகவே உலரக்கூடிய வகையிலும் பொருத்தமான வர்ணத்தை தெரிந்தெடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.