இதற்காகப் உற்பத்தி செய்யப்படும் சூரியப் படலங்களில் பயன்படுத்தப்படும் கலங்களை தற்போது ஒளி ஊடுபுகவிடக்கூடிய கண்ணாடிகளினால் உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட சூரியக்கலங்களைக் கொண்டு எதிர்காலத்தில் கட்டப்படும் கட்டிடங்கள், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை அமைப்பதனால் இலகுவாகவும், போதிய இடவசதியிலும் போதியளவு மின்சாரத்தை பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.